ஒரு முன்னணி செய்தித்தாளில் வெளியாகி உள்ள தலையங்கம் நாகரிக உலகத்திற்கு விடப்பட்ட சவாலாகத்தெரிகிறது.
செய்தி இப்படிப்போகிறது......
நீங்கள் ஒரு முதியவராகவோ, மைனாரிட்டி சாதியைச்சேர்ந்தவராகவோ, ஆள் பலம் இல்லாதவராகவோ இருந்தால்....
உங்களுக்கு சொந்தமாக ஒரு வீடோ, நிலமோ நகரத்தின் முக்கியமான பகுதியில் இருந்தால்.....
ஒரு கூட்டம் அந்த சொத்தை அவர்களுக்கு விற்றுவிடுமாறு உங்களை வற்புறுத்தும்.
நீங்கள் மறுத்தால், சாம, பேத, தான, தண்டம் ஆகிய நான்கு முறைகளிலும் உங்களுக்கு தொல்லை தரும்.
உங்கள் வீட்டுப்பெண்களையும் அந்தக்கூட்டம் அச்சுறுத்தும்.
இறுதியில் விற்றுத்தொலைப்பது என்று முடிவு செய்துவிட்டால் விலையை அந்தக்கூட்டமே நிர்ணயிக்கும்.
50 லட்ச ரூபாய்க்கு விற்றுத்தருவதாக வாக்களித்து, உங்களிடம் அவர்கள் பெயருக்கு ஒரு பவர் பத்திரம் வாங்கிக்கொள்ளும்.
அந்தக்கூட்டம் தன்னுடைய செல்வாக்கைப்பயன்படுத்தி 100 லட்சத்திற்கு அந்த சொத்தை விற்கும்.
நிறைய செலவாகிவிட்டது என்றுகூறி உங்களுக்கு 30 லட்சம் கொடுக்கும்.
20 லட்சம் நடைமுறை செலவுகள் என்று உங்களிடம் கணக்கு ஒப்புவிக்கும்.
இந்தக்கொள்ளையில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களும், இருந்தவர்களும் கூட்டாக இருக்கிறார்களாம். காவல்துறையும் இவர்களுக்கு உடந்தையாம்.
பாவப்பட்ட குடிமகனுக்கு கையை பிசைந்துகொள்வதைத் தவிர வழியில்லை என்கிறது இந்த தலையங்கம்.
ஒவ்வொரு மாவட்ட தலைகளும் அப்பகுதியின் குறுநில மன்னர்களாக நினைத்துக்கொண்டு கோலோச்சுவதை கட்சித்தலைமைகள் தடுத்து நிறுத்தவேண்டும் என்கிறது இந்த தலையங்கம்.
மக்களின் அச்சத்தை மாற்றவல்ல மாமருந்து வாக்குச்சீட்டு என்பதை அதிகாரத்தில் உள்ளவர்கள் உணர்ந்துகொள்ளவேண்டும்.
No comments:
Post a Comment